உலக பொருளாதார அமைப்பு மக்களின் வாழ்க்கை தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியா 62வது இடத்தில் உள்ளது. நார்வே முதலிடத்தில் உள்ளது
லண்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க தூதரகத்திற்கு வருகை தந்துள்ள முதல் அமெரிக்க உயர்நிலைத் தலைவர் ‘டில்லர்ஸன்’(அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்) ஆவார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளது
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்டை – டை ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும்(கார்பிக்ஸ் தொழில்நுட்பம்) உலகின் முதல் மின் நிலையத்தை ஐஸ்லாந்து நாட்டில் நிறுவியுள்ளது
நவீன தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு சேவை வழங்குவதில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கின்றது. தற்போது அங்கு நடத்துனர் இல்லாமல் பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயண சீட்டு கட்டணம் ஏ.டி.எம் கார்டு வடிவில் இருக்கும் அட்டைகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றது
கிழக்கு ஜெருசலேம் நகரை பாலஸ்தீனம் நாட்டின் தலைநகராக்கும் அதிபர் ‘மஹ்மூத் அப்பாஸின்’ முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது
அகாடெமி விருதில் வழங்கப்படும் பிரத்யேக தங்கச் சிலையை முதன் முதலில் வடிவமைத்தவர் ‘ஜார்ஜ் ஸ்டான்ல’. 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ.மீ) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது
லைபீரியாவின் அதிபராக ஜார்ஜ் வியோ(முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர்) பதவியேற்றார்
தேசிய செய்திகள்
பஞ்சாப் ஃபரிட்கோட் மாவட்ட கல்வி வாரியம் பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் செல் போன் உபயோகிக்க தடை விதித்துள்ளது
தவளக்குப்பத்தில் பா.ஜ.க சார்பில் ‘மோடி பொது சேவை’ மையம் திறக்கப்பட்டது
ஆதார் எண்ணுடன், வாக்காளர் அட்டையும் இணைக்க வேண்டும் என்று புதிய தலைமை தேர்தல் அதிகாரி ஓம். பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்
டெல்லியில் ஜனவரி 26ம் தேதி நடைபெறம் குடியரசு தின விழாவில் ‘கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவுக் கொள்கை’ (ஆக்ட் ஈஸ்ட் பாலிசி) அறிவிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
கர்நாடகாவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 18 மாவட்டங்களில் 100 சதவீத கழிவறைகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது
விளையாட்டு செய்திகள்
ஸ்வீடனில் நடைபெற்ற ஜுனியர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ‘சித்தார்த் சிங்’ வெற்றி பெற்றார்
‘டுவென்டி -20’ தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ‘டேவிட் வார்னர்’ நியமிக்கப்பட்டுள்ளார்
2018ம் ஆண்டு 11ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 27ம் வரை நடைபெறுகிறது
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் உலக டூர் பாட்மிண்டன் போட்டி ஜகார்ந்தா நகரில் இன்று தொடங்குகிறது