ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று ஐஸ்லாந்து நாடு சட்டம் இயற்றியுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு சரிசமமான ஊதியம் வழங்கும் முதல் நாடு ஐஸ்லாந்து ஆகும்
சீனா தனது 3வது விமானம் தாங்கிக் கப்பலை அதிநவீன அம்சங்களுடன் கட்டமைக்கத் தொடங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
மேற்குவங்க அரசின் லோகாவை முதல்வர் மம்தா பானர்ஜி வெளிட்டுள்ளார்.
பிராந்திய ராணுவத்தில் (டெரிடோரியல் ஆர்மி) பெண்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உலக வங்கியின் ரூ.3,000 கோடி நிதியுதவியுடன் இந்தியாவில் திறன்மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அருண் ஜேட்லி (மத்திய நிதியமைச்சர்) தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.5 சதவீதமாக சரியும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
7வது தேசிய ஆண்கள் குத்துச்சண்டை போட்டி புதுச்சேரியில் நேற்று (5-1-2018) துவங்கியது.