ஆசியான் மாநாடு(2018) – ஜனவரி 25ம் தேதி டெல்லியில்(இந்தியா) நடைபெறவுள்ளது. (ஆசியான் - தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புரூணே ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு)
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு அளித்து வந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளது
பாரீஸில் € 2, 200 க்கும் குறைவான வருமானம் பெறும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இனி டிராம், மெட்ரோ, பேருந்து, RER ரயில்களில் இலவசமாக பயணம் செய்யும் விதமாக அவர்களுக்கு Navigo பாஸ் வழங்கப்படும் என பாரீஸ் அரசு அறிவித்துள்ளது
கேமரா தயாரிக்கும் கோடக் நிறுவனம் புகைப்படக் கலைஞர்களுக்காக ‘கோடக் காயின்’ என்ற வலைத்தள கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் தூக்கமின்மையால் ஆண்டுதோறும் 3500 குழந்தைகள் பலியாகி வருகின்றனர் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது
தேசிய செய்திகள்
ஆந்திர அரசு, எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளது
ஏர் இந்தியா நிறுவனத்தில் அன்னிய விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில் ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அட்டை மார்ச் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி) தொகுதி மேம்பாட்டுநிதித் திட்டம் 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
லூதியாணா(பஞ்சாப்) நகரக் காவலர்களுக்கு இனி வார விடுப்பு வழங்கப்படும் என்று நகர காவல் துறை ஆணையர் ஆர்.என். தோக் தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும், கடந்த 24 ஆண்டுகளில் துப்பரவு பணியின் போது 324 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநிலங்கள் அவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
தேசிய, சர்வதேச அளவிலான பாய்மர படகுப் போட்டியில் வேலூர் மாணவன் விஷ்ணு தங்கப் பதக்கம் வென்றார்
தென் ஆப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக மித்தாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்
20வது தேசிய இளையோர் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் வெள்ளி மற்றும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை தமிழக அணி கைப்பற்றியுள்ளது
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிர்வாக கவுன்சிலில்(பிஎஃப்ஐ), பெண் வீராங்கனைகளுக்கான பிரதிநிதியாக சரிதா தேவி(முன்னாள் உலக மற்றும் ஆசிய சாம்பியன்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்
அயர்லாந்து மற்றும் இந்தியா கலந்து கொள்ளும் இரண்டு டி 20 போட்டிகளில் விளையாட இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு அயர்லாந்துக்கு செல்ல உள்ளது