சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் பெண்கள் டாக்ஸி ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசேஞ்சேவிற்கு(ஆஸ்திரேலியா) ஈக்வடார் நாடு குடியுரிமை அளித்துள்ளது
வெளுத்த தோல், தோல் சுருக்கங்கள், அறுவை சிகிச்சை தழும்புகள் இருக்கும் பெண்களுக்கு வேலை கிடையாது என்று கானா அரசு அறிவித்துள்ளது
அமெரிக்காவில், இந்தியாவைச் சேர்ந்த ‘ரகுநந்தன் யண்டாமுரி’ என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் ஆவார்
அமெரிக்க நாடாளுமன்றத்தில், குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படும் ‘கிரீன் கார்டு’ தகுதி அடிப்படையில் வழங்கப்படவும், கிரீன் கார்டு ஒதுக்கீட்டை 45 சதவீதத்திற்கு அதிகரித்தும் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
சர்வதேச அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ளது
சிறுவயதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேரிய 8 லட்சம் பேரை வெளியேற்ற டிரம்ப் எடுத்த நடவடிக்கைக்கு சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை விதித்துள்ளது
உலகின் மிகவும் பரப்பரப்பான விமான வழித்தடங்கள் பட்டியலில், மும்பை – டெல்லி இடையிலான வழித்தடம் 3வது இடம் பிடித்துள்ளது. சியோல் ஜிம்போ – ஜெஜு வழித்தடம் (தென் கொரியா) முதலிடத்திலும், மெல்போர்ன் - சிட்னி வழித்தடம்(ஆஸ்திரேலி) 2வது இடத்திலும் உள்ளது
உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில்(2017) (நுழைவுவாயில், ஓய்வு அறைகள், வாடிக்கையாளர்களின் சேவை, பாதுகாப்பு, தூய்மை, உணவு வசதிகள் ) – ஜுபா விமான நிலையம்(சூடான்) முதலிடத்தில் உள்ளது
ஈரானில் அடுத்தடுத்து 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
கல்லப் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச நிறுவனம், உலகில் சிறந்த தலைவர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 3வது இடத்தில் உள்ளார்
நாட்டில் தூய்மையான இரயில் நிலையங்கள் பட்டியலில் கோழிக்கோடு(கேரளா) இரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. டெல்லி நிஜாமுதீன் இரயில் நிலையம் கடைசி இடத்தில் உள்ளது
வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள்(4 பேர் - செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், சூரியன் ஜோசப், மதன் லோகூர்) செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்
சுற்றுச் சூழலுக்கு உகந்த டாக்சி(மெட்ரினோ) நாட்டில் முதல் முறையாக டெல்லியில் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்
கேரள சிறையில் உள்ள கைதிகள், நெருங்கிய உறவினர்களுக்கு உறுப்புகளை நன்கொடையாக அளிக்க அனுமதி வழங்க கேரளஅரசு முடிவு செய்துள்ளது
பிளஸ் 1 வகுப்புக்களில் முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் மாணவர்கள் பிளஸ் 2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்
மத்தியப் பிரதேசத்தில், தேசிய இளைஞர் தினமான இன்று அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்று காலை 9 மணிக்கு சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணாயாமம் நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
பொள்ளாச்சியில் சர்வதேச அளவிலான பலூன் திருவிழா தொடங்கியது
விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் 2018ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக ‘சுரேஷ் ரெய்னா’ நியமிக்கப்பட்டுள்ளார்
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை(ஜனவரி 13) தொடங்குகிறது
மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில் நேசமணி கல்லூரி(மார்த்தாண்டம்) மாணவி ‘ஆர். திவ்யா ஸ்டெனி’ முதலிடம் பிடித்துள்ளார்
‘இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்’ என்று வர்ணிக்கப்படும் முன்னாள் வீரர் ‘ராகுல் டிராவிட்’ கிரிக்கெட் வாழ்க்கை ‘காமிக் புத்தகம்’என்ற தலைப்பில் வெளிவரவுள்ளது
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் நடால் முதலிடமும், பெடரர் 2வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் பிரிவில் முகுருசா முதல் இடத்தில் உள்ளார்