சவுதியில் முதன்முறையாக கால்பந்து போட்டியினை பார்வையிட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
இந்தியா மற்றும் ஜப்பான் கடலோர காவல்படையினர் சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இதற்கு ‘சாரெக்ஸ் - 18’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க ஜப்பானை சேர்ந்த ‘சுகாரு’ கப்பல் இந்தியா வந்துள்ளது
இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 287 கோடி (45.27 மில்லின் டாலர்) நிதியுதவியை, இந்தியா அளித்துள்ளது
சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்களுக்காக மற்றும் பெண்கள் மட்டுமே பணிப்புரியும் கார் விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்தில்(நைன் எல்ம்ஸ்) கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் ஜனவரி 16ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது அந்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார்
தேசிய செய்திகள்
உலகில் நேர்மையான நகரங்கள் பட்டியலை அமெரிக்காவின் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ் நிறுவனம் வெளியிட்டது. இதில் மும்பை 2வது இடத்தில் உள்ளது. ஹெல்சின்கி நகர்(பின்லாந்து) முதலிடத்தில் உள்ளது
இந்திய கடற்படை சேவைகளில் இருந்து ‘ஐஎன்எஸ் நிர்பிக்’, ‘ஐஎன்எஸ் நிர்கத்’ ஆகிய போர் கப்பல்கள் விடைபெற்றன
நாட்டில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் டெல்லி, காஜியாபாத், குருகிராமம் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது
இந்திய பாஸ்போட்டில் கடைசி பக்கத்தில் உள்ள இருப்பிட முகவரி அச்சிடுவதை நிறுத்தவும், நீல நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு நிறத்தில் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க, நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப பரிவை டெல்லி போலீஸ் தொடங்கியுள்ளது
மைசூரில் புதிதாக கட்டியுள்ள இந்திரா கேன்டீனை முதல்வர் சித்தாராமையா திறந்து வைத்தார்
புகையில்லா பசுமை வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு சாலை வரி கிடையாது என கோவா அரசு அறிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதாதேவி(60 கி.கி), சோனியா(57 கி.கி), சர்ஜுபாலா தேவி(48 கி.கி) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் இன்று தொடங்குகிறது
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முதல் பெண் வர்ணனையாளர் - கஸ்தூரி நாயுடு(இந்திய வம்சாவளி)
முத்தரப்பு கிரிக்கெட் தொடர்(இலங்கை, ஜிம்பாப்வே, வங்காளதேசம்) ஜனவரி 15ம் தேதி வங்காளத் தேசத்தில் தொடங்குகிறது
8வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி பிப்ரவரி 1ம் தேதி டெஹ்ரானில்(ஈரான்) தொடங்குகிறது