வங்கக்கடலின் மத்திய வளைகுடாவின் அருகேயும், தென்கிழக்கு பகுதியிலும் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தம் தீவிரமடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது. இதற்கு ‘கஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
உத்திரப்பிரதேச அரசு புதிதாக கட்டப்பட்டுள்ள இகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை வைத்துள்ளது. இந்த மைதானம் இப்போது ‘பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்’ என்று அழைக்கப்படுகிறது.
இலவச Wi-Fi, CCTV கண்காணிப்பு, பொதுத்தகவல் காட்சியமைப்பு & நிறுத்தங்கள் அறிவிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் குடிமக்கள் தோழமைமிகு “மோ பேருந்து” சேவையை அண்மையில் ஒடிசா மாநில அரசாங்கம் புவனேசுவரில் தொடங்கி வைத்துள்ளது.
மாநில அரசுக்கு சொந்தமான தலைநகர நகர்ப்புற போக்குவரத்துக் கழகத்தின் ‘நகரப் பேருந்து நவீனமயமாக்கல்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் தங்களின் பயணச்சீட்டை பதிவுசெய்து கொள்வதற்கும், பேருந்துகளின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்கும் “Mo Bus” செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
குவைத்தில் நடந்த 8வது ஆசிய ஷாட்கன் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் ஸ்கீட் போட்டியில், அங்கத் வீர் சிங் பஜ்வா 60 புள்ளிகளைப் பெற்று உலக சாதனையுடன் தங்கத்தை வென்றுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்பை வெல்லும் முதல் இந்திய ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் வீரர் என்ற பெருமையையும் அங்கத் பெற்றுள்ளார்.
நியமனங்கள்
உஸ்பெக் தொழிலதிபரும், விளையாட்டு நிர்வாகியுமான கபூர் ரகிமோவ், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
###strong
இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் லோசானில் அமைந்துள்ளது.
ஈரானுக்கான இந்திய தூதராக இருந்த சௌரவ் குமார், மியான்மருக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரானுக்கான புதிய இந்திய தூதராக கத்தம் தர்மேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பிரபல மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) ஸ்லோன் நிர்வாக கல்லூரியில் நடந்த 3வது இந்தியா குளோபல் உச்சிமாநாட்டில், ஹிந்தி நடிகர் அனுபம் கேருக்கு ‘சிறப்பு விருது – Distinguished Fellow’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
புத்தகங்கள்
“The Fire Burns Blue : A History of Women’s Cricket in India” என்ற நூலை காருண்யா கேசவ் மற்றும் சித்தாந்தா பதக் ஆகிய இரண்டு விளையாட்டுத்துறை பத்திரிக்கையாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.
70களின் காலங்களில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னோடியாக இருந்த டயானா எடுல்ஜி மற்றும் சாந்தா ரங்கசாமி போன்றோர் குறித்தும், தற்கால பெண்கள் கிரிக்கெட்டின் நட்சத்திரங்களாக விளங்கும் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌர் போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்தும் இந்நூல் கூறுகிறது.
இந்நூல் நவம்பர் 30 அன்று வெஸ்ட்லேண்ட் ஸ்போர்ட் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.