பாகிஸ்தான் ஏர்லைன்ஸை (பொதுத்துறை விமான நிறுவனம்) தனியார் மயமாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பிரத்தானியாவில் முதல் முறையாக சீக்கிய பெண்(பிரீத் கௌர் கில்) நிழல் அமைச்சரவையில்(ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும், விமர்சிப்பதற்கும் அமைக்கப்படுவது) எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்
சமூக நல ஒப்பந்தத்தின் படி சுவிட்சர்லாந்துக்கு 41.5 மில்லியன் பிராங்குகளை நிதியாக வழங்க பிரான்ஸ் ஒப்புக் கொண்டது
தேசிய செய்திகள்
சைக்ரோசேவ் என சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனம் நடத்திய (மத்திய அரசின் திட்டம் தொடர்பாக) கருத்துக் கணிப்பில் பயனாளிகளுக்கு நேரடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ், மானிய உர விற்பனையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு 59 சதவீதம் விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றம், நாடாளுமன்றம் இணைந்தே தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அருண் ஜெட்லி (மத்திய நிதி அமைச்சர்) தெரிவித்துள்ளார்.