துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற கார்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ – சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், (இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த ஆண்டு புதிதாக சேர்ந்தது)) பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் இந்தியா முதன்முறையாக பங்கேற்றது
இந்தோனேசியாவில் நாட்டில் 17ம் நூற்றாண்டில் டச்சு ஆட்சியாளர்களின் காலனி ஆதிக்க காலத்தின் போது கட்டப்பட்ட பழைமையான கடல்சார் அருங்காட்சியகம் இன்று தீப்பற்றி எரிந்தது
2017ம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து 460 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்
ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.825 கோடி நிதியுதவியில்(ரூ.825 கோடி), தற்போது பாதி(ரூ. 405) மட்டுமே வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது
வடகொரியாவின் அணு ஆயுதபிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக வான்கூலர் குழுவைச் சேர்ந்த 20 நாடுகள் அமைப்பு ஆலோசனை நடத்தின
ஏமனில் உள்ள ஹவுதி என்ற போராளிக் குழு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி ஏவுகணையை செலுத்தியது. சவுதி அரேபியா இராணுவம் இந்த ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்தது
தேசிய செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு சிட்டாகாங் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்
உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை தேசிய அளவைக் காட்டிலும், தமிழகத்தில் அதிகம் என்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்
மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 65வது கூட்டம் டெல்லியில், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்(மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை) தலைமையில் நடைபெற்றது
அகமதாபாத்தில் ஐ கிரியேட் எனப்படும் தொழில்நுட்ப மைய துவக்க விழாவில் இஸ்ரேல் பிரதமர் மற்றும் அவர் துணைவியார் கலந்து கொண்டனர்
இஸ்ரேல் பிரதமர்(பெஞ்சமின் நெதன்யாகு) மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பல்வா நகரில்(குஜராத்) உள்ள தொழில் முனைவோர் வழிகாட்டு மையம் மற்றும் சபர்கந்தாவில் உள்ள விவசாய மையத்தில், விவசாய ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கி வைக்க இன்று குஜராத் செல்கின்றனர்
விபத்துக்களை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 4 சக்கர வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார்
போர் விமானத்தில்(சுக்கோய் - 30) பறந்த முதல் பெண் அமைச்சர் - நிர்மலா சீதாராமன்