பார்லிமெண்ட்களில் அதிகப் பெண் அரசியல்வாதிகளைக் கொண்ட சர்வதேச நாடுகள் பட்டியலில் ருவாண்டா முதலிடத்தில்(தொடர்ந்து 10 ஆண்டுகள்) உள்ளது
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் - ஹாலிமா யாகோபு
பாலின வேறுபாடு இல்லாமல் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே சம்பளம் வழங்கும் நாடுகள் - ஐஸ்லாந்து, ஸ்வீடன், ருவாண்டா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்
உலகில் முதன்முதலாக ஹைட்ரஜன் எரிவாயு உதவியால் இயங்கும் சைக்கிளை, பிரான்மா நிறுவனம்(பிரான்ஸ்) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 9100 அமெரிக்க டாலர்கள்(ரூ.6 லட்சம்)
பிரிட்டனில் பொதுமக்கள், தனிமை மற்றும் சமுதாயத்தில் தனித்துவிடப்படுவதால் ஏற்படும் பிரச்சனையை கவனிப்பதற்கு புதிய துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைச்சராக ‘டிரசே குரூச்சு’ நியமிக்கப்பட்டுள்ளார்
உலகின் மிகப் பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உலக தமிழர்கள் சார்பில்(வெளிநாடுகளில் - மொய் விருந்து) ரூ.3 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது
2018- குளிர்க்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென்கொரிய வீரர்கள் ஒரே கொடியின் கீழ் விளையாட உள்ளனர்
ஸ்பெனில் குதிரகள் தீ மிதிக்கும் விநோத பாரம்பரிய திருவிழா(லுமினாரியஸ் - 500 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்) நடைபெற்றது
சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்ற ரோபோ, சோபியா தற்போது மும்பையில் உள்ள ஐஐடி ஆண்டு விழாவில் இந்திய கலாச்சார முறைப்படி புடவை உடுத்தி கலந்து கொண்டது
இந்திய இராணுவத்திற்கு ரூ.3,547 கோடி மதிப்பில் துப்பாக்கிகள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
தேசிய செய்திகள்
மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து நீட்தேர்வு கேள்விகளை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது
பிப்ரவரி 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனம் செல்ல உள்ளார். இவர், பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமராவார்
ஹஜ் புனித பயணத்துக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது
26-11-2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக இன்று நினைவு சதுக்கம் திறக்கப்பட உள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர்(பெஞ்சமின் நெதன்யாகு) மற்றும் அந்த தாக்குதலில் தாய், தந்தையை இழந்த ‘மோஷே ஹோல்ட்ஸ்பெர்’ என்ற சிறுவனும் கலந்த கொள்கின்றனர்
சென்னையில் ஏப்ரல் 11-16ம் தேதி வரை இராணுவ கண்காட்சி நடைபெறும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதியமைச்சர்களுடன் கருத்துக்கேட்பு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் சர்வதேச பெண் தொழிலதிபர்களின் கருத்தரங்கை, நேற்று(ஜனவரி 17) சந்திரப்பாபு நாயுடு துவக்கி வைத்தார்
உலக வர்த்தக அமைப்பில்(டபிள்யுடிஓ) அங்கம் வகிக்கும் 40 நாடுகளின் அமைச்சர்களை மட்டும் அழைத்து, சர்வதேச அளவிலான மாநாடு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது