அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் 2017ம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது என உலக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் முதல் முறையாக சீக்கிய மதத்தை சேர்ந்தவர்(குர்பீர் எஸ் கிரேவால்) அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகங்களுக்கு ‘பொய் செய்தி விருதுகள்’ வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் மிட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது
2040ம் ஆண்டுக்குள் குறுகியதொலைவு பயணங்களுக்கான விமானங்களை 100 விழுக்காடு மின் மயமாக்க நார்வே அரசு திட்டமிட்டுள்ளது
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டித்துக்கொள்ள வகை செய்யும் சட்ட மசோதா பிரிட்டன் பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
ரோமானியாவின் புதிய பிரதமராக ‘வியோரிகா தான்சிலா’ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ரோமானியாவின் முதல் பெண் பிரதமராவார்
தேசிய செய்திகள்
18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் எண்கட்டாயம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் பொறுப்பேற்கவுள்ளார்
இரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது
கோல்கட்டாவில்(மேற்கு வங்கம்) போக்குவரத்து போலீசாருக்கு எல்.இ.டி. பல்பு பொருத்தப்பட்ட சீருடை வழங்கப்பட்டுள்ளது
இந்தியாவில் அதிக வாசர்கள் படிக்கும் பத்திரிக்கைகளில் முதல் 10 இடங்களில் தினந்தந்தி பத்திரிக்கை 5வது இடத்தை பிடித்துள்ளது. இதில், டைனிக் ஜக்ரான், இந்துஸ்தான், அமர் உஜலா என்ற 3 இந்தி பத்திரிக்கைகள் 1, 2, 3வது இடத்தில் உள்ளது
ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பிகார், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 9 மாநிலங்களின் சிறுபான்மையினர் நல அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது
விளையாட்டு செய்திகள்
விராட் கோலி(இந்திய அணியின் கேப்டன்) டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளி எட்டிய 2வது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்
டாக்டர் மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான 10வது ஓபன் இன்டர்நேஷனல் செஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது
உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது
ஐசிசியின் 2017ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு ‘ஹசன் அலி’(பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்