ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதன் காரணமாக அந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பழுப்பு நிற கடவுச் சீட்டுக்கு(பாஸ்போர்ட்) மாற்றாக நீல நிற கடவு சீட்டுகளை விநியோகிக்க அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
ஜேர்மனி, மிக உயரமான மலையில்(zugspitze) மணிக்கு 3,213 மீட்டர் பயணம் செய்யும் மற்றும் 600 பயணிகளை அழைத்து செல்லக்கூடிய உலகின் முதல் ரோப் காரை தயாரித்துள்ளது
ஐ.நா கவுன்சில், வடகொரியா மீது (கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதால்) புதிய தடையை விதித்துள்ளது. இதன் படி 90 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் செயல்படும் ஐக்கிய அமைதி காக்கும் படை அணியுடன் இலங்கை ராணுவப் படை அணி இணைந்து பணியாற்ற உள்ளது
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிப்பதில் ஐ.நா சபை அமெரிக்காவிற்கு எதிரான தீர்மானத்தை எடுத்தது. ஐ.நாவின் இத்தகைய தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்
தேசிய செய்திகள்
அங்கன்வாடியில் குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டால் வாகனம் ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீராபானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது
உத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் விற்றால் மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் சிறந்த பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சல்மான்கான், ஷாருகான் மற்றும் விராட் கோலி(இந்திய கிரிக்கெட் அணி) 1, 2, 3வது இடத்தில் உள்ளனர்
விளையாட்டு செய்திகள்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடும் டெஸ்ட் தொடருக்கு ‘தி ஃப்ரீடம் சீரிஸ்’ என்ற புதிய பெயரை சூட்ட இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்துள்ளது
2017ம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பாரா தடகள வீரர்களுக்கான பிரிவில் ஸ்வரூப் மஹாவீர் உல்ஹான்கர்(மகாராஷ்டிரா) தங்கம் வென்றார்
35 பந்துகளில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - ரோகித் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் அடுத்த ஆண்டில் கிரிக்கெட் அகாதெமி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது
மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி (காஞ்சிபுரம்) சாம்பியன் பட்டம் வென்றது