சைபர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளையும் மீறி, முதலீடுகளை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் 1, 2, 3 வது இடத்தில் உள்ளது
பிரத்தானியாவில் பிற நாட்டவர்கள் நிரந்தர குடியுரிமைப்(Settled Status) பெறுவதற்கு 72 பவுண்ட்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பிரத்தானிய அரசு தெரிவித்துள்ளது
உலகில் தொழில்முனைவோர் அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ‘லாஸ் ஏஞ்சல்ஸ்’ நகரில்(அமெரிக்கா) மார்ச் 4ம் தேதி நடைபெறுகிறது
உலக அளவில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிக பணிச்சுமை உள்ளது என்று ஐ.நா சபை ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது
இந்தியா – பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தால் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய ஐ.நா பொதுச்செயலாளர் தயாராக உள்ளதாகவும், அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா சபை தலையிடாது எனவும் ஐ.நா பொது சபை செய்தி தொடர்பாளர் ‘ஸ்டீபன் டுஜாரிக்’ தெரிவித்துள்ளார்
உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பருவநிலை மாற்றம், பயங்கர வாதம், சுயநலப்போக்கு ஆகிய மூன்றும், தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களாக உருவெடுத்துள்ளன என்றும் நாட்டில் சிவப்பு நாடா முறை ஒழிக்கப்பட்டு, சிவப்பு கம்பளம் விரிக்கப்படும் நடைமுறை உருவாகியுள்ளது எனவும் பேசினார்
இந்தியர்கள் ‘குட் மார்னிங்’ என்ற மெசேஜை மில்லியன் கணக்கில் அனுப்பி இன்டர் நெட் சேமிப்பை நிரப்பி விடுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
நாட்டில், 7 முக்கிய நகரங்களில் உள்ள 70 இடங்களில் ஒலி மாசு அதிகம் உள்ள இடங்கள் பட்டியலிடப்பட்டது. இதில் ஜீடிமெத்லா(ஹைதராபாத்) முதலிடத்திலும், வடலா(மும்பை) 2வது இடத்திலும் உள்ளது
நாடு முழுவதும் 11 ஆயிரம் இரயில்களிலும், 8500 .ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று இரயில்வே துறை அதிகாரி தெரிவித்துள்ளார்
தேசிய தகுதித் தேர்வு (நெட் தேர்வு) எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
ராஜ்தானி, சதாப்தி விரைவு இரயில்களுக்கு மாற்றாக இரயில் 18 மற்றும் இரயில் 20 என்ற புதிய இரயில்களை, இந்தியன் இரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது
இந்தியா – மியான்மர் - தாய்லாந்து இடையே நெடுஞ்சாலை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு(2019) இறுதியில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
விமானங்களில் இன்டர் நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இதன்படி 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரையில் இணையச் சேவையைப் பயன்படுத்தும்போது பயணிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று விமானத்துறை தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் தஞ்சாவூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது
உலகின் மிகவும் பணக்கார கிளப்பாக ‘மான்செஸ்டர் யுனைடெட்’ தேர்வு(2வது முறையாக) செய்யப்பட்டுள்ளது
பெண்களுக்கான டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை அப்ஸ்கேல் அமைப்பின் சார்பில் ஓஎம்ஆர் மாரத்தான் போட்டி பிப்ரவரி 4ம் தேதி பழைய மகாபலிபுரம் சாலையில் நடைபெற உள்ளது
ஆஸ்திரேலிய அணியின் லெக் ஸ்பின்னர் ‘லாயிட் போப்’ 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனைப் படைத்துள்ளார்