சுற்றுச்சூழல் பாதிப்படைந்த நாடுகள்(பசுமை நாடுகள்) பட்டியலில் இந்தியா 177வது இடத்தில் உள்ளது
சீனாவில் முக்கிய 3 இரயில் பாதைகளை(கேன்லாங், கன்ருயில்லாங் மற்றும் ஜான்ங்லா) இணைக்கும் புதிய நான்லாங் இரயில்வே பாதையை 1500 தொழிலாளர்கள் 9 மணி நேரத்தில் உருவாக்கியுள்ளனர்
வரி ஏய்ப்பு நாடுகள் என்ற கருப்பு பட்டியலில் இருந்து பனாமா, ஐக்கிய அரபு அமீரகம், துனிசியா, மங்கோலியா, மக்காவ், கிரினடா, பார்படாஸ் உள்ளிட்ட 8 நாடுகளை, ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது
ஆஸ்கர் திரைப்பட விருதில் சிறந்த ஆவணப் படத்துக்கான இயக்குநர் பிரிவில் முதல் முறையாக திருநங்கையின் பெயர்(யான்சி ஃபோர்ட்) பரிந்துரைக்கப்பட்டுள்ளது
எல்லை தாண்டுவதாக பிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 17.5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் சலவை எந்திரங்களுக்கும், சூரிய மின்தகடுகளுக்கும் மாறுபட்ட வரி விதிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.
தேசிய செய்திகள்
டெல்லியில் இன்று ஆசியான் மாநாடு தொடங்குகிறது
1950, ஜனவரி 24ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. 68 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த தினத்தை உத்திரப்பிரதேச அரசு கொண்டாடியது
இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையினர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தங்களது சிறப்பு படைகளுடன் பங்கேற்க உள்ளனர்
என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிமுகப்படுத்தினார். இதன்படி படிக்கும் காலத்தில் நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அரசு விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டு அவசியம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ரேஷன் அட்டை இனி உபயோகப்படுவதில்லை.
மத்தியப்பிரதேசத்தில் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண்களுக்கு பதிலாக ‘ஸ்மைலி’ படங்கள் மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது
400 டி-20 போட்டிகளில் விளையாடிய உலகின் ஒரே கிரிக்கெட் வீரர் -பொல்லார்டு(மேற்கிந்திய தீவுகள்)
கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படுபவர் - சச்சின் டெண்டுல்கர்
சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகையை முதல் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி(கத்துக்குட்டி) அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது