ஒரே ராக்கெட் (லாங் மார்ச்-2சி) மூலம் மூன்று புவி நுண்ணுணர்வு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.
துபாய்க்கு செல்லும் எமிரேட்ஸ் விமானங்களில் ஏறுவதற்கு துனிசிய பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீலங்காவில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தற்காலிக தடையை நீக்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டுக்கான விங்சூட் உலகக் கோப்பை (சீனா) போட்டியில் பறக்கும் உடை அணிந்து வானில் இருந்து குதித்து பறக்கும் குழு சாதனை படைத்துள்ளது.
தேசிய செய்திகள்
நாட்டிலேயே முதல் முறையாக பெங்களுரு நகருக்கென பிரத்யேக லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் புறநகர் ஏசி ரயில் சேவை மும்பையில் இன்று (25-12-2017) துவங்கப்பட்டுள்ளது.
பெங்களுரு மாநகரில் 300 இடங்களில் இலவச வை-பை வசதி ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு உலகப் பொருளாதார அமைப்பின் (டபிள்யூஇஎஃப்) உச்சிமாநாடு டாவோஸ் நகரில் (சுவிட்சர்லாந்து) ஜனவரி 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
வாக்களிக்க பதிவு செய்து கொண்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
கஜகஸ்தானில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சதிஷ் குமார் (இந்தியா) தங்கம் வென்றார்.
ஒரே ஆண்டில் உலக அளவில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் - ரோகித் சர்மா
இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் 20:20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.