பசிபிக் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச கடற்படைப் பயிற்சி – ஆஐஎம்பிஏசி
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (பிரிட்டன்) 800 ஆண்டு கால வரலாற்றில் கடந்த 2017-ம் ஆண்டு மாணவர்களை விட (1,165) மாணவிகள் (1,275) பேர் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில், ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கயா முஸ்லிம்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டு அரசு ஏற்படுத்திய குழுவிலிருந்து பில் ரிச்சர்ட்சன் (அமெரிக்காவின் முன்னாள் தூதரும், நியூ மெக்ஸிகோ மாகாண முன்னாள் ஆளுநர்) விலகினார்.
இந்தியாவை போன்று பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஆதார் அட்டை முறையை செயல்படுத்த அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது.
ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க ஸ்பெயின் விஞ்ஞானிகள் ரோபோட் (ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம்) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
நடுவானிலேயே இடைமறித்து அழிக்கக் கூடிய ரூ.39,000 கோடி மதிப்பிலான எஸ்-400 டியைம்ஃப் ரகத்தைச் சேர்ந்த 5 இடைமறி ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
தேசிய செய்திகள்
நாடு முழுவதும் 69-வது குடியரசு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.
ஆசியா கூட்டமைப்புடன் இந்தியா நட்புறவு 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, ‘ஏசியான் - இந்தியா நினைவு மாநாடு’ டெல்லியில் நடத்தப்படுகிறது.
இந்தியா – ஆசியான் மாநாட்டில் “தென்கிழக்கு ஆசிய கடல் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெறுவதில் இந்தியா – ஆசியான் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
சையது முஷ்தாக் அலி டிராபி, சூப்பர் லீக் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது
ஐசிசியு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 4வது கால் இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் குரேஷிய வீரர் மரின் சிலிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் மகளில் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் கெர்பர் தோல்வி அடைந்துள்ளார்.
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) 10-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.