உலக வரலாற்றில் முதன் முறையாக மிகப் பெரிய குடியேற்ற அனுமதியை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வெளிநாட்டவர் குடியேறுவதற்கு கனடா அரசு அனுமதி வழங்கவுள்ளது
அமெரிக்காவில் வெளிநாட்டினர் அதிக அளவில் பணியாற்றுவதற்கான, ஹெச் 1பி விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் புதிய மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
உலகிலேயே தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரம் - கேப் டவுன்(தென் ஆப்பிரிக்கா)
உலகில் தலை சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. கனடா மற்றும் ஜெர்மனி, 2, 3வது இடத்தில் உள்ளது
டோக்கியோவில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி ‘டாரோ கோனோ’ கலந்து கொண்டார்
அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் 18 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்
துபாயில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் பாடல்களை பாடிய மாணவி சுதேசா(கேரளா) கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு துபாய் அரசு சார்பில் சுதேசாவுக்கு ‘ஹேக் ஹடம்தான் விருதுகள்’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
தேசிய செய்திகள்
இந்தியாவில் வளர்ந்து வரும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது
இந்தியாவில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, இலவச பெயர் பதிவு திட்டம் இன்று (ஜனவரி 27) அறிமுகமாகுகிறது. இதற்காக ‘ரன்’ என்ற புதிய வலைதள சேவை துவங்கப்பட்டுள்ளது
162 ஆண்டுகள் பழைமையான நீராவி இரயில்(ஃபெர்ரி குயின்), குடியரசு தினத்தில்(ஜனவரி 26) தன் பயணத்தை மீண்டும் தொடங்கியது
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த நிதியாண்டு முதல் விவசாயத்துக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அந்த மாநில ஆளுநர் ‘இ.எஸ்.எல் நரசிம்மன்’ அறிவித்துள்ளார்
2018 குடியரசு தினவிழாவில் முதன் முறையாக ஆல் இந்தியா ரேடியோ சார்பில் அமைக்கப்பட்ட ஊர்தி பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் உரையை ஒலித்தப்படி அணி வகுப்பில் முதலிடத்தில் இருந்தது
குடியரசு தினவிழாவில் ஆசியான் நாடுகள் கலந்து கொண்டதால், ஆசியான் - இந்தியா இடையே சுதந்திர வர்த்தகத்திற்கான நடப்பாதை போடப்பட்டுள்ளது என்று பிரதமர் ‘மோடி’ தெரிவித்துள்ளார்
இந்தியாவில் முதல் முறையாக கொல்கத்தாவில் மிதக்கும் மார்க்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் முதன் முறையாக இந்த ஆண்டு(2018) தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் ‘பத்ம ஸ்ரீ விருதுக்கு’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது