ஐ.நா பொதுச் சபை ரூ.564 கோடியை ஐ.நா கொள்கை உருவாக்கம் மற்றும் பராமரிப்புக்காகவும், ரூ.46,000 கோடியை அமைதிப் பணிகளுக்காகவும் ஒதுக்கியுள்ளது
இஸ்மதாபாத்தில்(பாகிஸ்தான்) புதிய இராணுவ தலைமையகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பொருப்பாற்றிய மூத்த அதிகாரிகள் இருவருக்கு (கிம் ஜாங் சிங் மற்றும் ரி பியாங் சோல்) அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது
பிரேசில் தங்கள் நாட்டுக்கான வெனிசுலா தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது
சவூதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என அந்நாட்டுதொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
இலங்கையில் (தெற்கு ஆசிய அளவில்) தாய் மரண வீதம் குறைவான அளவு பதிவாகியுள்ளது என்று இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
ஐ.நாவின் அடுத்த ஆண்டுக்கான(2018-19) பட்ஜெட் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா பட்ஜெட் பொது சபை தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் பதிவாகிவுள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும் உள்ளது
தேசிய அளவில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
நாட்டில் இதுவரை 4.5 லட்சம் மக்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
பாஸ்போர்ட் பெறும் போது கைவிரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என லோக் சபா இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்
ஆந்திராவில் ரூ.149 கட்டணத்தில் இணையதளம் மற்றும் கேபிளுடன் கூடிய தொலைபேசி சேவையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்
ஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைக்கப்பட உள்ளது
ஆதார் அட்டையின் கீழ் சிறைக் கைதிகளையும் கொண்டு வர கேரள சிறைத்துறை முடிவு செய்துள்ளது
குழந்தைகள் பாலியல் குற்றம் தொடர்பான 4, 694 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது
பேஸ்புக் நிறுவனம், புதிதாக அக்கவுண்ட் உருவாக்கும் போது ஆதார் எண்களை இணைக்கும் (போலி அக்கவுண்ட்களை தவிர்க்க) முயற்சியில் ஈடுபட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
சென்னை ஹாக்கி சங்கத்தின் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்
தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் (முதல் முறையாக இறுதிச் சுற்றில் 33 புள்ளிகளுடன்) அனிசா செய்யது(அரியானா) தங்கப் பதக்கம் வென்றார்
செய்யது முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு விஜய் சங்கர் தலைமை தாங்குகிறார்
சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் விராட்கோலி(இந்திய அணி) 3வது இடத்தில் உள்ளார்