29/01/2018 – Tamil
உலக செய்திகள் அமெரிக்காவில் இபி-5 விசா பெற செய்யப்படும் முதலீட்டு தொகை (6.4 கோடியிலிருந்து)ரூ.11.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது கோபேங்கிங்ரேட்ஸ் நிறுவனம், உலக அளவில் குறைந்த பொருட்செலவில் வாழ்வதற்கு வசதியுள்ள நாடுகள் பட்டியலை(112) வெளியிட்டது - இதில், இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தென்கொரியா முதலிடத்தில் உள்ளது கோவாவில் இருந்து கடல் வழியாக உலகை சுற்றிவர இந்திய கடற்படை பெண்கள்(6 பேர் - வர்திகா ஜோஷி, பிரதிபா ஜம்வால், பி.ஸ்வாதி, விஜயா தேவி, ஐஸ்வர்யா, பயால் குப்தா) ஐஎன்எஸ்வி தாரணி படகில் பயணம் மேற்கொண்டனர். தற்போது இந்த படகு இங்கிலாந்து தீவை அடைந்துள்ளது பின்லாந்து நாட்டின் அதிபராக ‘சாலி நினிஸ்டோ’ தேர்வு செய்யப்பட்டுள்ளார் உலகிலேயே மிக வயதான கொரில்லா(விலா) அமெரிக்காவின் சான் டைகோ மிருக கண்காட்சியில் வாழ்ந்து வந்தது. இந்த விலா கொரில்லா 60 வயதில் மரணமடைந்தது செக் குடியரசின் அதிபராக மிலோஸ் ஸீமான் தேர்வு(2வது முறை) செய்யப்பட்டுள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த மென்ஸா அமைப்பு நுண்ணறிவுத் திறன் தேர்வை நடத்தியது. இதில் வோகிங்ஹாம் நகரில்(பிரிட்டன்) உள்ள மெகுல் கார்க்(இந்திய வம்சாவளி) 162 மதிப்பெண்களுடன் புதிய சாதனையை படைத்துள்ளார். உலகின் தலை சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் 160 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் தீவு – பீடாசோ நதியின நடுவே ஃபிஸான் என்ற தீவு உள்ளது. வரலாற்று நினைவு சின்னமான இந்த தீவை ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிமாறிக்கொள்கின்றது உலகில் மிகப் பெரிய இணைய திருட்டு – ஜப்பானில் 534 டாலர் மின்னணு பணம் திருடப்பட்டுள்ளது தேசிய செய்திகள் ஆட்சி செய்யும் அரசை நம்பும் மக்களை அதிகம் கொண்ட உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. சீனா மற்றும் இந்தோனேசியா, 1, 2வது இடத்தில் உள்ளது இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக அகமதாபாத் நகரை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்துள்ளது 2018ம் ஆண்டில் நாடாளுமன்ற பட்ஜெட் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றப்பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், பார்வை குறைபாடு, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமானோர், காதுகேளாதோர் மற்றும் ஆசிட் விச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உடம்பில் டாட்டு(பச்சை குத்துதல்) வரைந்திருந்தால் விமானப்படையில் வேலை கிடையாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உத்திரப் பிரதேசத்தில் உள்ள துத்வா தேசிய பூங்காவில் சர்வதேச பறவைகள் திருவிழா பிப்ரவரி 3ம் தேதி துவங்குகிறது மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக மாவட்டந்தோறும் சமூக ஊடக மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது Read More: http://weshineacademy.com/enig...